search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி அனந்தன்"

    பா.ஜனதா தலைவர் எச்.ராஜா பொது இடங்களில் கவனத்துடன் பேச வேண்டும் என்று குமரி அனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். #raja #kumarianandan

    ராயபுரம்:

    ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக ராஜாஜி சாலையில் இருந்து பேரணி புறப்பட்டது. அதில் மகளிர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் ரபேல் போர் விமானம் போன்று மாதிரி செய்து கொண்டுவரப்பட்டது.

    பின்னர் குமரி அனந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைவர் எச்.ராஜா பொது இடங்களில் கவனத்துடன் பேச வேண்டும். அரசியலில் உள்ளவர்கள் நாகரீகம் கருதி நாவடக்கத்துடன் பேச வேண்டும். எச்.ராஜாவின் இத்தகைய பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இனிவரும் காலங்களில் அவர் பொறுப்புணர்ந்து பேச வேண்டும். பெரியார் சிலையின் மீது காலணி வீசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் சிவராஜ சேகர், எம்.எஸ். திரவியம், கராத்தே தியாகராஜன், வீரபாண்டியன், மகளிர் அணித்தலைவி ஜான்சி ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×